மத்திய அமைச்சரவை
வானவியல் துறையில் இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
12 JUN 2019 8:10PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் வானவியல் / வான் இயற்பியல்/ வான்வெளி அறிவியல் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
புதிய அறிவியல்பூர்வ முடிவுகளை உருவாக்கவும், அறிவியல் கருத்துப் பறிமாற்றம் மற்றும் பயிற்சி, அறிவியல் கட்டமைப்பு வசதியை கூட்டாகப் பயன்படுத்துதல் மூலம் மனிதவள மேம்பாட்டை அதிகரிக்கவும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நவம்பர் 2018-ல் கையெழுத்திடப்பட்டது.
(வெளியீட்டு அடையாள எண்: 1574222)
வருகையாளர் எண்ணிக்கை : 128