பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகளிர் தலைமையிலான நிர்வாகத்திற்கான தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 07 APR 2026 12:59PM by PIB Chennai

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்தியாவில் மகளிர் தலைமையிலான ஆட்சிமுறையை மேம்படுத்துவதற்கான செயல்திட்டத்தை அக்கட்டுரை விவரிக்கிறது.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

"பிரதிநிதித்துவம் என்பது உண்மையான செல்வாக்காக மாற வேண்டும். அரசு எப்போதும் எல்லா வடிவங்களிலும் மகளிர் சக்திக்கு முன்னுரிமை அளிக்கிறது. எனவே, 'மகளிருக்கு அதிகாரமளிப்பதற்கான சட்டம்' இதற்கு அடித்தளமிட்டுள்ள நிலையில், இந்தியா மகளிர் தலைமையிலான நிர்வாகத்தை நோக்கி முன்னேறுகிறது. இதுவும் வளர்ச்சியடைந்த இந்தியாவின் முக்கியத் தூண்களில் ஒன்றாகும்!

மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா எழுதிய கட்டுரை, எதிர்வரும் காலத்திற்கான செயல்திட்டத்தை விவரிக்கிறது. படித்துப் பாருங்கள்."

***

SS/IR/RJ/KPG/SE


(रिलीज़ आईडी: 2268872) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam