விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அன்னை பூமியைப் பாதுகாப்பதற்கான தேசியத் தீர்மானம்: விவசாய நிலங்களைப் பாதுகாப்போம் இயக்கம் ஜூன் 1-ம் தேதி ராய்செனில் தொடங்குகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 31 MAY 2026 4:12PM by PIB Chennai

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டத்தில் உள்ள ராம்சியா கிராமத்தில் ஜூன் 1-ம் தேதி தொடங்கவுள்ள 'விவசாய நிலங்களைப் பாதுகாப்போம் இயக்கம் தேசியத் தொடக்கத்திற்கு முன்னதாக, மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர், திரு சிவராஜ் சிங் சவுகான் இன்று நாடு முழுவதும் உள்ள வேளாண் அறிவியல் மையங்கள், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனங்கள், வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூத்த வேளாண்மை அதிகாரிகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காகப் பணியாற்றும் மற்றவர்களுடன் ஒரு மெய்நிகர் கலந்துரையாடலை நடத்தினார். இந்தக் கலந்துரையாடலின் போது, பொதுமக்களின் பங்கேற்பு, அறிவியல் அணுகுமுறை மற்றும் தேசியப் பொறுப்புணர்வுடன் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல அவர் அழைப்பு விடுத்தார். இந்த முக்கியமான முயற்சியில் அனைத்து மாநில முதல்வர்களின் பங்களிப்பையும் கோருவதற்காக அவர்களுடன் தொலைபேசியில் பேசியதாக திரு. சவுகான் கூறினார். மத்திய அமைச்சர்கள் மற்றும் பிற பொதுப் பிரதிநிதிகளையும் இந்தப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிகழ்வில், மத்திய அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகான் தனது ஊக்கமளிக்கும் உரையில், இது வெறும் அரசுத் திட்டம் மட்டுமல்ல, அன்னை பூமியைப் பாதுகாத்தல், விவசாயத்தின் எதிர்காலத்தைப் பாதுகாத்தல் மற்றும் எதிர்காலத் தலைமுறையினரின் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு தேசியப் பிரச்சாரம் என்று கூறினார். அதிகரித்து வரும் வெப்பநிலை, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் கட்டுப்பாடற்ற மற்றும் சமநிலையற்ற பயன்பாடு, மண் ஆரோக்கியத்தின் சீரழிவு ஆகியவை பற்றி இந்த இயக்கம் கவனம் செலுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267236&reg=3&lang=1

***

TV/PKV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2267299) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada