தேர்தல் ஆணையம்
இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை மாநாடு புதுதில்லியில் ஜனவரி 21 அன்று தொடங்குகிறது
प्रविष्टि तिथि:
19 JAN 2026 11:39AM by PIB Chennai
இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை மாநாடு 2026-ஐ நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த 3 நாள் மாநாடு புதுதில்லி பாரத் மண்டபத்தில் ஜனவரி 21 அன்று தொடங்குகிறது. ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மைத் துறையில் இந்திய நடத்தும் மிகப் பெரிய உலகளாவிய மாநாடாக இது அமையும். சர்வதேச அமைப்புகள், இந்தியாவில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தேர்தல் நடைமுறையில் பணியாற்றும் நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர். 70-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 சர்வதேச பிரதிநிதிகள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஜனவரி 21 அன்று நடைபெறவுள்ள தொடக்க அமர்வின் போது தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ்குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சாந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் பிரதிநிதிகளை வரவேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கின்றனர்.
4 ஐஐடி நிறுவனங்கள், 6 ஐஐஎம் நிறுவனங்கள், 12 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள், இந்திய மக்கள் தொடர்பியல் நிறுவனம் உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இந்த மாநாட்டின் விவாதத்தில் பங்கேற்க உள்ளனர்.
தேர்தல் மேலாண்மை அமைப்புகளுடன் 40-க்கும் அதிகமான இருதரப்புக் கூட்டங்களை தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது. தேர்தலின் போது உலகில் எதிர்கொள்ளக் கூடிய பல்வேறு சவால்கள், ஒத்துழைப்புக் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215977®=3&lang=1
***
TV/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2216055)
आगंतुक पटल : 18