பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

நியாயமான அணுகல், பல்வேறு தொழில்துறை பயன்பாடுகள் மற்றும் ஏற்றுமதிகளுக்கான நிலக்கரி இணைப்புகளை ஏலம் விடுவதற்கான கோல்சேது சாளரத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இடுகை இடப்பட்ட நாள்: 12 DEC 2025 4:18PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, நிலக்கரியை எந்தவொரு தொழில்துறை பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கும் பயன்படுத்துவதற்காக, "கோல்சேது சாளரம்" என்ற புதிய சாளரத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது  தடையற்ற, திறமையான மற்றும் வெளிப்படையான பயன்பாட்டிற்கான நிலக்கரி இணைப்பு ஏலக் கொள்கைக்கு உதவும். இந்தப் புதிய கொள்கை, அரசால் மேற்கொள்ளப்படும் நிலக்கரித் துறை சீர்திருத்தங்களின் வரிசையில் சேர்க்கப்படுகிறது.

இந்தக் கொள்கை, 2016-ம் ஆண்டின் முறைப்படுத்தப்படாத துறை இணைப்பு ஏலக் கொள்கையில் கோல்சேது என்ற தனி சாளரத்தைச் சேர்ப்பதன் மூலம், எந்தவொரு தொழில்துறை பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கு நீண்ட கால அடிப்படையில் நிலக்கரி இணைப்புகளை ஏல அடிப்படையில் ஒதுக்க அனுமதிக்க முடியும். மேலும் நிலக்கரி தேவைப்படும் எந்தவொரு உள்நாட்டு வாங்குபவரும் இணைப்பு ஏலத்தில் பங்கேற்கலாம். இந்த சாளரத்தின் கீழ் கோக்கிங் நிலக்கரி வழங்கப்படாது.

எதிர்காலத்தில் அதிகரிக்கும் சுத்தம் செய்யப்பட்ட நிலக்கரிக்கான தேவையைக் கருத்தில் கொண்டு, சுத்தம் செய்யும் இயந்திரங்களுடன் நிலக்கரி இணைப்புகள், நாட்டில் சுத்தம் செய்யப்பட்ட நிலக்கரி கிடைப்பதை அதிகரிக்கும். இதன் விளைவாக இறக்குமதி குறையும். மேலும், சுத்தம் செய்யப்பட்ட நிலக்கரி நாட்டிற்கு வெளியேயும் வாங்குபவர்களைக் கண்டறியும். எனவே, சுத்தம் செய்யப்பட்ட நிலக்கரியை ஏற்றுமதி நோக்கத்திற்காகவும் பயன்படுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202994&reg=3&lang=1

****

SS/SMB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2203377) வருகையாளர் எண்ணிக்கை : 59