பிரதமர் அலுவலகம்
இந்திய எதிர்காலத்தின் இதயமாக மகளிர் சக்தி எவ்வாறு திகழ்கிறது என்பது குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
01 DEC 2025 3:28PM by PIB Chennai
இந்திய எதிர்காலத்தின் இதயமாக மகளிர் சக்தி எவ்வாறு திகழ்கிறது என்று மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளர்.
அமிர்த காலத்தை இந்தியா அடையும் நிலையில், இது வெறும் முழக்கம் அல்ல என்றும், இது தேசிய இயக்கம் என்றும் அவர் கூறியுள்ளார். ஒரே மையத்தில் அனைத்து உதவிகள் முதல் விரைவு நீதிமன்றங்கள் வரை, தொலைபேசி உதவி மையங்கள் முதல் சமூகப் பாதுகாப்பு மையங்கள் வரை சக்தி இயக்கத்தின் கீழ் அரசு மகளிருக்கான கண்ணியத்தையும் வாய்ப்பையும் உறுதி செய்வதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி பதிவிட்டுள்ளதற்கு, திரு மோடி பதிலளித்திருப்பதாவது:
“இந்திய எதிர்காலத்தின் இதயமாக மகளிர் சக்தி திகழ்கிறது. அமிர்த காலத்தை இந்தியா அடையும் நிலையில், இது வெறும் முழக்கம் அல்ல, இது தேசிய இயக்கம். ஒரே மையத்தில் அனைத்து உதவிகள் முதல் விரைவு நீதிமன்றங்கள் வரை, தொலைபேசி உதவி மையங்கள் முதல் சமூகப் பாதுகாப்பு மையங்கள் வரை சக்தி இயக்கத்தின் கீழ் அரசு மகளிருக்கான கண்ணியத்தையும் வாய்ப்பையும் உறுதி செய்கிறது. மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவியின் மிக விவேகமான கட்டுரை. வாசிக்கவும்!”
***
Release ID : 2196899
SS/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2197168)
आगंतुक पटल : 6