பிரதமர் அலுவலகம்
நாட்டின் வளர்ச்சியில் அருணாச்சலப் பிரதேசத்தின் பங்கை எடுத்துக்காட்டும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
Posted On:
11 OCT 2025 1:51PM by PIB Chennai
நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் பங்கையும், அந்த மாநிலத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
முதல்முறையாக, இந்தியாவின் வடகிழக்குப் பகுதி, நாட்டின் ஓரத்தில் உள்ள எல்லைப் பகுதியாக மட்டுமல்லாமல், நாட்டின் வளர்ச்சிக் கதையில் துடிக்கும் இதயமாக உள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். புதிய விமான நிலையங்கள் முதல் அதிகாரம் பெற்ற சுய உதவிக்குழுக்கள் வரை, போக்குவரத்து இணைப்பு முதல் படைப்பாற்றல் வரை, அருணாச்சலப் பிரதேசம் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் உணர்வை பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா எழுதிய கட்டுரைக்கு பதிலளிக்கும் வகையில் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"வடகிழக்கு மாநிலங்கள் என்பது ஒரு எல்லைரயோரப் பகுதியாக மட்டுமல்லாமல், முதல் முறையாக அது இந்தியாவின் வளர்ச்சிக் கதையின் துடிப்பான இதயமாக மாறியுள்ளது. புதிய விமான நிலையங்கள் முதல் அதிகாரம் பெற்ற சுய உதவிக்குழுக்கள் வரை, போக்குவரத்து இணைப்பு முதல் படைப்பாற்றல் வரை, அருணாச்சலப் பிரதேசம் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் உணர்வைப் பிரதிபலிக்கிறது. மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா ( @JM_Schindia) எழுதிய கட்டுரையை அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும்."
***
(Release ID: 2177744)
AD/PLM/RJ
(Release ID: 2177850)
Visitor Counter : 7