உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புனித நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாட்டின் தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் மோடி அரசு அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை பரிசாக வழங்குகிறது: மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

Posted On: 22 SEP 2025 1:17PM by PIB Chennai

புனித நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாட்டின் தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் மோடி அரசு அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை பரிசாக வழங்கியிருப்பதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

புனித நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாட்டின் தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் மோடி அரசு அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை பரிசாக வழங்குகிறது! ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பற்றி பிரதமர் திரு மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் இன்று முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில்சுமார் 390 பொருட்கள் மீதான வரி குறைப்புகள் இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில் அடங்கும். உணவு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள்வீட்டு கட்டுமான பொருட்கள்வாகனங்கள்வேளாண்மைசேவைகள்பொம்மைகள்விளையாட்டுகள்கைவினைப் பொருட்கள்கல்விசுகாதாரம் மற்றும் காப்பீடு உள்ளிட்ட துறைகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் அறிவிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி குறைப்புமக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன்அவர்களது சேமிப்பையும் அதிகரிக்கும்என்று சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியான பதிவுகளின் வாயிலாக திரு அமித் ஷா கூறியுள்ளார்.

தற்சார்பு இந்தியா என்ற உறுதிப்பாட்டை அடைவதில் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்துமாறும்தன்னிறைவு அடைவதற்கு அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் எவ்வாறு ஆற்றல் சேர்க்கும் என்றும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது பிரதமர் குறிப்பிட்டார். வேளாண்மைசுகாதாரம்ஜவுளி மற்றும் மனிதர்களால் உருவாக்கப்படும் இழைகள் உள்ளிட்ட துறைகளில் ஜிஎஸ்டி வரிகளைக் குறைப்பதன் மூலம் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் வாயிலாக நடுத்தர பிரிவினருக்கான வாய்ப்புகளை அதிகரித்து அவர்கள் தொடர்ந்து சேமிக்கமோடி அரசு வழிவகை செய்த வருவதாக உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். ஏழைகள்இளைஞர்கள்விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு சேவை புரியும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டிற்கு சிறந்த உதாரணமாக அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் விளங்குகின்றன என்று திரு அமித் ஷா தெரிவித்தார். வேளாண் உபகரணங்கள் மற்றும் உரத்துறையில் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டிருப்பதை விவசாயிகள் வரவேற்றிருக்கிறார்கள். வாகனங்கள் வாங்குவது குறித்து மக்கள் இனி யோசனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் தன்னிறைவையும் ஊக்குவிக்கும். உங்களது அன்றாட பயன்பாட்டில் நீங்கள் அனைவரும் உள்நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2169503

 

(Release ID: 2169503)

 

SS/BR/SH


(Release ID: 2169766)