பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

2025 குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார் 

प्रविष्टि तिथि: 09 SEP 2025 8:23PM by PIB Chennai

 

2025 குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர்  திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:


“2025 குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு சி பி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள். சமூகத்திற்கு சேவை செய்வதிலும், ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரமளிப்பதிலும் அவரது வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நமது அரசியலமைப்பு மாண்புகளை வலுப்படுத்தி, நாடாளுமன்ற நடவடிக்கைகளை மேம்படுத்தி, தலைசிறந்த குடியரசு துணைத் தலைவராக அவர் விளங்குவார் என்று நான் நம்புகிறேன். 


@CPRGuv”

*** 

(Release ID: 2165080)

AD/BR/KR


(रिलीज़ आईडी: 2165163) आगंतुक पटल : 68
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , Telugu , Marathi , Kannada , Malayalam , Bengali , English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati