பிரதமர் அலுவலகம்
இணையவழி விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025 நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் வரவேற்பு; இணையவழி -விளையாட்டுகளை ஊக்குவிக்கும் மற்றும் சமூகத்தைப் பாதுகாக்கும் எனத் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
21 AUG 2025 10:47PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இணையவழி விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025 நிறைவேற்றப்பட்டதை பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
விளையாட்டு, புதுமை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் மையமாக இந்தியாவை மாற்றுவதற்கான அதன் உறுதிப்பாட்டை இந்த மசோதா எடுத்துக்காட்டுகிறது என்று பிரதமர் கூறினார். இது இணையவழி விளையாட்டுகள் மற்றும் ஆன்லைன் சமூக விளையாட்டுகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களிலிருந்து நமது சமூகத்தைப் பாதுகாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேற்கூறிய மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து மத்திய அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட எக்ஸ் பதிவிற்கு பதிலளித்த பிரதமர் திரு.நரேந்திர மோடி தனது பதிவில் கூறியிருப்பதாவது;
“நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா, விளையாட்டு, புதுமை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் மையமாக இந்தியாவை மாற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. இது இணைய-விளையாட்டுகள் மற்றும் இணையவழி சமூக விளையாட்டுகளை ஊக்குவிக்கும். அதே நேரத்தில், இணையவழி நிதி தாக்கமுள்ள விளையாட்டுகளின் தீங்குகளிலிருந்து நமது சமூகத்தை இது பாதுகாக்கும்.
***
(Release ID: 2159579)
SS/EA/KR
(रिलीज़ आईडी: 2159758)
आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada