பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

2025 சுதந்திர தின உரைக்கான யோசனைகளைப் பகிர்ந்துகொள்ள மக்களுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்

Posted On: 01 AUG 2025 8:52AM by PIB Chennai

79-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடுவதற்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டை கொத்தளத்திலிருந்து தாம் நிகழ்த்தவிருக்கும் உரைக்கான தங்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் வழங்குமாறு அனைத்து குடிமக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று  அழைப்பு விடுத்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“இந்த ஆண்டின் சுதந்திர தினத்தை நாம் நெருங்கிவரும் நிலையில் எனது நாட்டின் குடிமக்களிடமிருந்து கருத்துக்களை அறிவதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்!

இந்த ஆண்டின் சுதந்திர தின உரையில் எந்த மையப்பொருள் அல்லது கருத்துகள் பிரதிபலிப்பதை நீங்கள் விரும்புகிறீர்கள்?

உங்களின் எண்ணங்களை மைகவ், நமோ செயலி ஆகிய தளங்களில் பகிருங்கள்….

https://www.mygov.in/group-issue/let-your-ideas-and-suggestions-be-part-pm-modis-independence-day-speech-2025/

https://nm-4.com/MXPBRN

***

(Release ID:  2151140)

AD/SM/SMB/AG/KR


(Release ID: 2151187)