உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புது தில்லியில் 'அரசியலமைப்பு படுகொலை தின' நிகழ்வில், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, 'அவசரநிலை டைரிகள் - ஒரு தலைவரை உருவாக்கிய ஆண்டுகள்' என்ற புத்தகத்தை வெளியிட்டார்

Posted On: 25 JUN 2025 7:57PM by PIB Chennai

'அரசியலமைப்பு படுகொலை தின' நிகழ்வில், அவசரநிலை எதிர்ப்பு இயக்கத்தின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அனுபவங்களின் தொகுப்பான 'அவசரநிலை டைரிகள் - ஒரு தலைவரை உருவாக்கிய ஆண்டுகள்’ (தி எமர்ஜென்சி டைரீஸ் - இயர்ஸ் தட் ஃபோர்ஜ் எ லீடர்) என்ற புத்தகத்தை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை  அமைச்சர் திரு  அமித் ஷா இன்று புதுதில்லியில் வெளியிட்டார். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், தில்லி துணைநிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா, முதல்வர் திருமதி ரேகா குப்தா மற்றும் பல பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அமித் ஷா, அவசரநிலையின் போது இளம் சங்க பிரச்சாரகராக திரு நரேந்திர மோடி, ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் நானாஜி தேஷ்முக் தலைமையிலான 19 மாத கால இயக்கத்தின் போது தலைமறைவாக இருந்து அவர் எவ்வாறு போராடினார் என்பது குறித்து இந்த புத்தகம் குறிப்பிடுகிறது, என்றார்.  மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் குடும்பத்தினருடன் அவர் எவ்வாறு பேசினார், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார் என்பதை இந்த புத்தகம் விவரிக்கிறது. இந்தப் புத்தகம், சந்தைகள், சதுக்கங்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில், திரு மோடி, ரகசியமாக வெளியிடப்பட்ட பல செய்தித்தாள்களை விநியோகித்ததாகவும், குஜராத்தின் 25 வயது இளைஞராக அவர் போராட்டத்தை வழிநடத்தியதாகவும் விவரிக்கிறது. அந்த நேரத்தில் திரு மோடி தலைமறைவாக இருந்து வேலை செய்தார், சில சமயங்களில் ஒரு துறவியாக, சில சமயங்களில் சர்தார்ஜியாக, சில சமயங்களில் ஒரு ஹிப்பியாக, சில சமயங்களில் ஒரு தூபக் குச்சி விற்பனையாளராக அல்லது சில சமயங்களில் ஒரு செய்தித்தாள் விற்பனையாளராக தனது அடையாளத்தை மறைத்திருந்தார் என்று திரு ஷா கூறினார்.

அப்போதைய பிரதமரின் சர்வாதிகாரக் கருத்துக்களை எதிர்த்தவர், 25 வயது இளைஞர் என்று திரு அமித் ஷா கூறினார். வாரிசு அரசியலை மீண்டும் நிலைநாட்டுவதற்காக அவசரநிலை அமல்படுத்தப்பட்டது, ஆனால் அதை எதிர்த்துப் போராடுவதற்காக திரு மோடி வீடு வீடாக, கிராமம் கிராமமாக, நகரம் நகரம் எனச் சென்று போராடினார். இறுதியாக 2014 ஆம் ஆண்டு முழு நாட்டிலிருந்தும் வாரிசு அரசியலை வேரோடு பிடுங்கினார். ஊடகத் தணிக்கை, அரசின் அடக்குமுறை, சங் மற்றும் ஜனசங்கத்தின் போராட்டம், அவசரநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் விளக்கம் மற்றும் சர்வாதிகாரம் முதல் பொது பங்கேற்பு வரை இந்த புத்தகத்தில் ஐந்து அத்தியாயங்கள் உள்ளன என்று அவர் கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139690

***


AD/RB/DL


(Release ID: 2139720)