பிரதமர் அலுவலகம்
இந்து ஹ்ருதய சாம்ராட் பாலசாகேப் தாக்கரே மகாராஷ்டிரா சம்ருத்தி மகாமார்க் தொடக்க விழாவுக்காக மகாராஷ்டிர மாநில தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்குப் பிரதமர் பாராட்டு
Posted On:
05 JUN 2025 6:18PM by PIB Chennai
இந்து ஹ்ருதய சாம்ராட் பாலசாகேப் தாக்கரே மகாராஷ்டிரா சம்ருத்தி மகாமார்க் பிரமாண்டமாகத் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்கட்டமைப்பு சார்ந்த வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டிற்காக மகாராஷ்டிராவில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இந்தத் திறப்பு விழா குறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் அலுவலகத்தின் பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதிலும் மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்துவதை மேம்படுத்துவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்துவதற்காக மகாராஷ்டிராவில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு பாராட்டுகள்”.
“"மகாராஷ்டிராவில் இணைப்பை மேம்படுத்துவதிலும், எளிதான வாழ்க்கையை ஊக்குவிப்பதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு வாழ்த்துகள்!"
***
(Release ID: 2134278)
AD/TS/PLM/AG/RB/DL
(Release ID: 2134314)
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam