பிரதமர் அலுவலகம்
ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார்
இந்த ஆண்டு உலக சுகாதார கூட்டமைப்பின் கருப்பொருள் 'ஆரோக்கியத்திற்கான ஒரு உலகம்', இது உலக சுகாதாரத்திற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையுடன் எதிரொலிக்கிறது: பிரதமர்
ஆரோக்கியமான உலகின் எதிர்காலம் உள்ளடக்கம், ஒருங்கிணைந்த பார்வை மற்றும் ஒத்துழைப்பைப் பொறுத்தது: பிரதமர்
உலகின் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை நாம் எவ்வளவு சிறப்பாகக் கவனித்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது: பிரதமர்
உலகின் தென்பகுதி நாடுகள், குறிப்பாக சுகாதார சவால்களால் பாதிக்கப்படுகிறது, இந்தியாவின் அணுகுமுறை பிரதிபலிக்கக்கூடிய, அளவிடக்கூடிய, நிலையான மாதிரிகளை வழங்குகிறது: பிரதமர்
ஜூன் மாதத்தில், 11வது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது, இந்த ஆண்டு, 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்காக யோகா' என்ற கருப்பொருள்: பிரதமர்
ஆரோக்கியமான கிரகத்தை உருவாக்கும் அதே வேளையில், எவரும் விடுபடவில்லை என்பதை உறுதி செய்வோம்: பிரதமர்
Posted On:
20 MAY 2025 4:27PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த ஆண்டின் கருப்பொருளான 'ஆரோக்கியத்திற்கான ஒரு உலகம்' என்பதை எடுத்துரைத்து, அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் அது இந்தியாவின் உலகளாவிய சுகாதாரத்திற்கான தொலைநோக்குப் பார்வையுடன் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார். 2023-ம் ஆண்டு உலக சுகாதார கூட்டமைப்பில் 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' பற்றி அவர் பேசியதை அவர் நினைவு கூர்ந்தார். ஆரோக்கியமான உலகின் எதிர்காலம் உள்ளடக்கம், ஒருங்கிணைந்த தொலைநோக்கு மற்றும் ஒத்துழைப்பைச் சார்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் சுகாதார சீர்திருத்தங்களின் மையத்தில் உள்ளடக்கம் உள்ளது என்பதை குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, 580 மில்லியன் மக்களை உள்ளடக்கிய மற்றும் இலவச சிகிச்சையை வழங்கும் உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து எடுத்துரைத்தார். இந்தத் திட்டம் சமீபத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்தியர்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. புற்றுநோய், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களை முன்கூட்டியே பரிசோதிக்கவும் கண்டறியவும் உதவும் ஆயிரக்கணக்கான சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களின் இந்தியாவின் விரிவான கட்டமைப்பு குறித்து அவர் எடுத்துரைத்தார். கணிசமாக குறைந்த விலையில் உயர்தர மருந்துகளை வழங்கும் ஆயிரக்கணக்கான பொது மருந்தகங்களின் பங்களிப்பையும் அவர் சுட்டிக்காட்டினார். சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதில் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் தடுப்பூசியைக் கண்காணிக்கும் டிஜிட்டல் தளம் மற்றும் நன்மைகள், காப்பீடு, பதிவுகள், தகவல்களை ஒருங்கிணைக்க உதவும் தனித்துவமான டிஜிட்டல் சுகாதார அடையாள அமைப்பு போன்ற இந்தியாவின் டிஜிட்டல் முன்முயற்சிகள் குறித்து அவர் குறிப்பிட்டார். தொலை மருத்துவம் மூலம், எவரும் ஒரு மருத்துவரிடம் இருந்து வெகு தொலைவில் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். 340 மில்லியனுக்கும் அதிகமான ஆலோசனைகளை செயல்படுத்தியுள்ள இந்தியாவின் இலவச தொலை மருத்துவச் சேவையை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் சுகாதார முயற்சிகளின் நேர்மறையான தாக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில், மொத்த சுகாதார செலவினத்தில் செலவழிப்பு சதவீதத்தில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்டார். அதே நேரத்தில், அரசின் சுகாதாரச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார்.
"உலகின் ஆரோக்கியம், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை நாம் எவ்வளவு நன்றாகப் பராமரிக்கிறோம் என்பதைப் பொறுத்தது" என்று பிரதமர் சுட்டிக் காட்டினார், உலகளாவிய தென் பகுதி நாடுகள் குறிப்பாக சுகாதார சவால்களால் பாதிக்கப்படுகிறது என்பதை எடுத்துரைத்தார், மேலும் இந்தியாவின் அணுகுமுறை பிரதிபலிக்கக்கூடிய, அளவிடக்கூடிய மற்றும் நிலையான மாதிரிகளை வழங்குகிறது என்பதாக கூறினார். இந்தியா தனது கற்றல் மற்றும் சிறந்த நடைமுறைகளை உலக நாடுகளுடன், குறிப்பாக உலகளாவிய தென் பகுதி நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். ஜூன் மாதம் நடைபெறும் 11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பிரதமர் உலகளாவிய பங்கேற்பை ஊக்குவித்தார். இந்த ஆண்டின் கருப்பொருளான 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கு யோகா என்பதை அவர் எடுத்துரைத்தார். மேலும் யோகாவின் பிறப்பிடமாக இந்தியாவின் பங்களிப்பை குறிப்பிட்டு அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
ஐஎன்பி ஒப்பந்தத்தின் வெற்றிகரமான பேச்சுக்களுக்காக உலக சுகாதார அமைப்பு மற்றும் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். உலகளாவிய ஒத்துழைப்பு மூலம் எதிர்கால தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு இது என்று அவர் விவரித்தார். யாரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்து, ஆரோக்கியமான கிரகத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். தமது உரையின் நிறைவாக பிரதமர், வேதங்களிலிருந்து ஒரு பிரார்த்தனையை மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், நோயிலிருந்து விடுபட்டதாகவும் இருக்கும் ஒரு உலகத்திற்காக இந்தியாவின் முனிவர்கள் எவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள் என்பதை அவர் பிரதிபலித்தார். இந்த தொலைநோக்கு உலகை ஒன்றிணைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
***
(Release ID: 2129899)
SM/IR/RR/KR
(Release ID: 2129941)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam