பிரதமர் அலுவலகம்
சிக்கிம் மாநிலம் உருவான 50-வது ஆண்டு நிறைவையொட்டி பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
16 MAY 2025 10:13AM by PIB Chennai
சிக்கிம் மாநிலம் உருவான 50-வது ஆண்டு நிறைவை இன்று (16.05.2025) கொண்டாடும் அம்மாநில மக்களுக்கு, சிக்கிம் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு, சிக்கிம் மாநிலமாக உருவானதன் 50-வது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடும் நிலையில், இந்த தினம் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது என அவர் கூறியுள்ளார். சிக்கிம் மாநிலம் அமைதியான அழகான, வளமான கலாச்சார மரபுகளுடன் கடினமாக உழைக்கும் மக்களையும் கொண்ட மாநிலமாக உள்ளது என திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
"சிக்கிம் மாநிலமாக மாறிய 50-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்த நிகழ்வு சிறப்பு வாய்ந்தது!
சிக்கிம் அமைதியான, அழகான, வளமான கலாச்சார மரபுகளையும் கடினமாக உழைக்கும் மக்களையும் கொண்ட மாநிலமாகும். இந்த மாநிலம் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த அழகான மாநிலத்தின் மக்கள் தொடர்ந்து செழிப்படையட்டும்."
***
(Release ID: 2129001)
SM/PLM/RR/SG
(रिलीज़ आईडी: 2129016)
आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Nepali
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam