பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மாநில அமைப்பு தினத்தை முன்னிட்டு திரிபுரா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 21 JAN 2025 8:41AM by PIB Chennai

திரிபுராவின்  மாநில உதய தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய முன்னேற்றத்திற்கு திரிபுரா மாநிலம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியுள்ளதாவது:

 

"மாநில உதய தினத்தை முன்னிட்டு, திரிபுரா மக்களுக்கு எனது வாழ்த்துகள். தேசிய முன்னேற்றத்திற்கு இம்மாநிலம் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறது. இம்மாநிலம், அதன் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்காகவும் புகழ் பெற்றதாகும். திரிபுரா தொடர்ந்து வளர்ச்சியின் புதிய உச்சங்களை அடையட்டும்.”

TS/BR/KR

***

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2094719) வருகையாளர் எண்ணிக்கை : 64