பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சுரங்கப்பாதை திறப்பு விழாவிற்காக ஜம்மு காஷ்மீரின் சோன்மார்க் வருவதை நான ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 11 JAN 2025 6:30PM by PIB Chennai

 

சுரங்கப்பாதை திறப்பு விழாவிற்காக தாம் ஜம்மு காஷ்மீரின் சோன்மார்க் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட சுரங்கப்பாதை திறப்புவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா வெளியிட்ட சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி எழுதியிருப்பதாவது:

"ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோன்மார்க்கில் சுரங்கப்பாதை திறப்பு விழாவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதாரத்திற்கான நன்மைகளை நீங்கள் சரியாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

மேலும், வான்வழி படங்கள் மற்றும் வீடியோக்களை ரசித்தேன்!"

****

SMB/KV

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2092145) வருகையாளர் எண்ணிக்கை : 63