உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம்

प्रविष्टि तिथि: 24 DEC 2024 12:36PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்து புதுதில்லியில் தேசிய குற்ற ஆவணக் காப்பக அதிரிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை செயலாளர், தேசிய குற்ற ஆவணக் காப்பக இயக்குனர் மற்றும் உள்துறை, என்.சி.ஆர்.பி, என்.ஐ.சி.ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஒவ்வொரு மாநிலம் / யூனியன் பிரதேசத்திலும் புதிய சட்டங்கள் தொடர்பான செயலிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அனைத்து குற்றவியல் வழக்குகளிலும் விசாரணை நடைமுறையை  விரைவுபடுத்த வேண்டும் என்று  கேட்டுக் கொண்டார். 

குற்றவியல் கண்காணிப்பு கட்டமைப்பு செயல்முறையின் முன்னேற்றத்தை வழக்கமான அடிப்படையில் கண்காணித்து, மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என்று திரு அமித் ஷா வலியுறுத்தினார். பல்வேறு சூழல்களில் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

*****

(Release ID: 2087523)

TS/PLM/KPG/RR


(रिलीज़ आईडी: 2087550) आगंतुक पटल : 89
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Gujarati , Telugu , Kannada , Malayalam