பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ரோகிணி கோட்போலே மறைவிற்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 25 OCT 2024 9:16PM by PIB Chennai

ரோகிணி கோட்போலே மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கோட்போலே ஒரு முன்னோடி விஞ்ஞானியாகவும் கண்டுபிடிப்பாளராகவும் திகழ்ந்தார் என்றும், அறிவியல் உலகில் அதிக அளவில் பெண்கள் பங்கேற்க  வேண்டும் என்று அவர் விரும்பியதாகவும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். அவரது  முயற்சிகள் வரும் தலைமுறையினருக்கு தொடர்ந்து வழிகாட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"ரோகிணி கோட்போலே அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர் ஒரு முன்னோடி விஞ்ஞானியாகவும் கண்டுபிடிப்பாளராகவும் இருந்தார். அறிவியல் உலகில் அதிகமான பெண்களை பங்கேற்கச் செய்வதில் வலுவான ஆதரவாளராகவும் திகழ்ந்தார். அவரது கல்வி தொடர்பான முயற்சிகள் வரும் தலைமுறையினருக்குத் தொடர்ந்து வழிகாட்டும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி."

***

(Release ID: 2068289)

TS/PLM/AG/RR


(रिलीज़ आईडी: 2069474) आगंतुक पटल : 90
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , Odia , Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Kannada , Malayalam