பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்; பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகையை அறிவித்துள்ளார்

Posted On: 20 OCT 2024 1:43PM by PIB Chennai

 

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மாநில அரசு மேற்பார்வையின் கீழ் உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில்  சாத்தியமான அனைத்து வழிகளிலும் ஈடுபடுவதை அவர் உறுதி செய்துள்ளார்

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

"ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் நடந்த விபத்து மனதை உலுக்குகிறது. அப்பாவி குழந்தைகள் உட்பட உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த வலியை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். அத்துடன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய நான் வாழ்த்துகிறேன். மாநில அரசு மேற்பார்வையின் கீழ் உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில்  சாத்தியமான அனைத்து வழிகளிலும் ஈடுபட்டுள்ளது: பிரதமர்"

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் கருணைத்தொகையைத் திரு மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

"ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் கருணைத்தொகையைப் பிரதமர் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.

***** *****

SMB/ KV

 



(Release ID: 2066505) Visitor Counter : 14