உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

அலுவல்மொழி வைரவிழா கொண்டாட்டங்கள், 4-வது அகில இந்திய அலுவல் மொழி மாநாடு- புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்பு


புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழியில் ஆரம்பக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது : திரு அமித் ஷா

Posted On: 14 SEP 2024 4:52PM by PIB Chennai

 புதுதில்லியில் நடைபெற்ற அலுவல் மொழி வைரவிழா கொண்டாட்டங்கள், 4-வது அகில இந்திய அலுவல் மொழி மாநாடு (பாரதிய ராஜ்பாஷா சம்மேளனம்) ஆகியவற்றில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 'ராஜ்பாஷா பாரதி' இதழின் வைரவிழா சிறப்பு மலரை உள்துறை அமைச்சர் வெளியிட்டார். வைர விழாவைக் குறிக்கும் வகையில் நினைவு அஞ்சல் தலையையும் நினைவு நாணயத்தையும் திரு அமித் ஷா வெளியிட்டார். 
 
அமித் ஷா தமது உரையில், நமது சுதந்திர இயக்கத்தில் இந்திக்கு பெரும் பங்கு உண்டு என்றார். 1857 புரட்சியின் தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இணைப்பு மொழி இல்லாதது என்று அவர் கூறினார். நமது நாடு ஒரு புவிசார் கலாச்சார நாடு என்றும், நமது நாட்டை இணைக்கும் இணைப்பு கலாச்சாரம் என்றும் அவர் கூறினார். நமது நாட்டின் ஒற்றுமை கலாச்சாரத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். நமது கலாச்சாரம் மொழிகளால் பிணைக்கப்பட்டுள்ளது என்றும், நமது மொழிகளை நாம் இழந்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என்றும் அவர் கூறினார். புதிய கல்விக் கொள்கை, ஆரம்பக் கல்வி தாய் மொழியில் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.

டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர், சி.ராஜகோபாலாச்சாரி, மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், கே.எம்.முன்ஷி, லாலா லஜபதி ராய், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஆச்சார்யா கிருபளானி என யாராக இருந்தாலும், இந்தியை ஊக்குவித்த நமது தலைவர்களில் பெரும்பாலானோர் இந்தி பேசாத பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். அவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு தாய்மொழிகள் இருந்தாலும் இந்தி மொழி நாட்டை ஒன்றிணைக்கும் ஒரு ஊடகம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார். 

நமது மொழிகளை யாராவது காப்பாற்ற முடியும் என்றால் அது தாய்மார்களால்தான் முடியும் என்று திரு அமித் ஷா கூறினார். அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுடன் தங்கள் தாய்மொழியில் மட்டுமே பேச வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதைச் செய்தால் நமது மொழிகளுக்கு எதுவும் ஆபத்தை ஏற்படுத்தாது என்று அவர் கூறினார். நமது மொழிகள் நாட்டிற்கும் உலகிற்கும் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து சேவை செய்யும் என்று திரு ஷா கூறினார். இனி வரும் காலம் ஆட்சி மொழி மற்றும் பிற இந்திய மொழிகளுக்கே உரியது என்று அவர் கூறினார். இனி இந்த நாட்டை எவராலும் எந்த விதமான அடிமைத்தனத்திலும் வைத்திருக்க முடியாது, மொழி என்ற அடிமைத்தனத்தில் வைத்திருக்க முடியாது என்று அவர் கூறினார்.

 மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சரும், இந்தியை இடமளிக்கும் வகையிலும், ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் மாற்றுவதில் அலுவல் மொழித் துறை நிறைய பணிகளைச் செய்துள்ளது என்று கூறினார். மற்ற இந்திய மொழிகளின் சொற்களை உள்வாங்குவதன் மூலம் இந்தியை ஒருபோதும் மாசுபடுத்த முடியாது, ஏனெனில் இந்தி தாய் கங்கை போன்றது, எப்போதும் புனிதமாக இருக்கும் என்று அவர் கூறினார். பல சொற்கள் இந்தியில் அல்ல, பிற உள்ளூர் மொழிகளில் உள்ளன, அவற்றை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். இந்த வார்த்தைகளை இந்தி ஏற்கும் அதே வேளையில், இந்தியின் பல வார்த்தைகளும் நமது உள்ளூர் மொழிகளால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் கூறினார். இந்தி ஷப்த் சிந்து அகராதியில் இந்தியாவின் ஒவ்வொரு மொழியின் வார்த்தைகளையும் நாங்கள் சேர்த்துள்ளோம் என்று உள்துறை அமைச்சர் கூறினார். இந்தியை ஏற்புடையதாகவும், நெகிழ்வானதாகவும், உரையாடலுக்கு உகந்ததாகவும் மாற்ற வேண்டும் என்று அவர் கூறினார். 

இன்று இந்தி ஐக்கிய நாடுகள் சபையின் மொழியாக மாறியுள்ளது என்றும் 10-க்கும் மேற்பட்ட நாடுகளின் இரண்டாவது மொழியாகவும் மாறியுள்ளது என்றும் திரு அமித் ஷா கூறினார். சர்வதேச மொழியாக மாறுவதை நோக்கி இந்தி தற்போது நகர்ந்து வருகிறது என்று அவர் கூறினார். இந்தியாவின் மொழிகளை இந்தி மூலம் வலுப்படுத்த முடியும் என்று திரு அமித் ஷா கூறினார். 

***

PLM/KV



(Release ID: 2055220) Visitor Counter : 23