பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல்

प्रविष्टि तिथि: 23 AUG 2024 10:22PM by PIB Chennai

நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய தூதரகம் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய தூதரகம் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது." 


**************** 

PLM/KV


(रिलीज़ आईडी: 2048438) आगंतुक पटल : 73
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam