பிரதமர் அலுவலகம்
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
16 AUG 2024 10:10AM by PIB Chennai
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்தினேன்.
தேச நிர்மாணத்தில் அவரது ஈடுஇணையற்ற பங்களிப்புக்காக எண்ணற்ற மக்களால் அவர் என்றும் நினைவுகூரப்படுவார். அவர், நாட்டு மக்கள் அனைவரும் மேம்பட்ட தரமான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்வதற்காக, தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் ஆவார். அவர் கனவுகண்ட இந்தியாவை உருவாக்க நாம் தொடர்ந்து பாடுபடுவோம்.
இன்று காலை ‘சடைவ் அடலில்’ உள்ள அவரது நினைவிடத்தில், பிற முக்கியப் பிரமுகர்களுடன் இணைந்து மரியாதை செலுத்தினேன்.”
***
(Release ID: 2045797)
MM/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2045858)
வருகையாளர் எண்ணிக்கை : 124
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam