பிரதமர் அலுவலகம்
அருணாச்சல பிரதேச மக்களின் தேசபக்தி, மாநிலத்தின் துடிப்பான கலாச்சாரப் பாரம்பரியத்தில் பிரதிபலிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி
இடுகை இடப்பட்ட நாள்:
13 AUG 2024 4:35PM by PIB Chennai
அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு காமெங்கில் உள்ள செப்பாவில் மேற்கொள்ளப்பட்ட வீடுகள் தோறும் தேசியக் கொடி (#HarGharTiranga) தொடர்பான ஊர்வலம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தின் துடிப்பான கலாச்சார பாரம்பரியத்தில் அம்மாநிலத்தின் தேசபக்தி தெளிவாக பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட காணொலிப் பதிவைப் பகிர்ந்து திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் தேசபக்தி ஆழமாக வேரூன்றிய நிலம் அருணாச்சல பிரதேசம். இது மாநிலத்தின் துடிப்பான கலாச்சார பாரம்பரியத்தை தெளிவாக பிரதிபலிக்கிறது. வீடுகள் தோறும் தேசியக் கொடி இயக்கத்தின் ( #HarGharTiranga ) மீதான இத்தகைய உற்சாகத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்".
***************
(Release ID: 2044844)
PLM/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2044855)
வருகையாளர் எண்ணிக்கை : 94
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam