பிரதமர் அலுவலகம்

சூரத்தில் நடைபெற்ற வீடுகள் தோறும் தேசியக் கொடி ஊர்வலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்

Posted On: 12 AUG 2024 8:08PM by PIB Chennai

வீடுகள் தோறும் தேசியக் கொடி ( #HarGharTiranga ) இயக்கத்தில் சூரத் மக்களின் உணர்வுப்பூர்வமான பங்கேற்பு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

குஜராத் அமைச்சர் ஹர்ஷ் சங்கவியின் காணொலிப் பதிவை மறு பதிவு செய்து, திரு நரேந்திர மோடி,   சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

"சூரத் எல்லாவற்றையுமே ஆர்வத்துடன் செய்து வருகிறது. அதில் வீடுகள் தோறும் மூவண்ணக் கொடி ( #HarGharTiranga ) இயக்கமும் விதிவிலக்கல்ல! சூரத் மக்களின் உணர்வை நினைத்து பெருமைப்படுகிறேன்".

***

(Release ID: 2044677)
PLM/RR



(Release ID: 2044746) Visitor Counter : 17