பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஃபிஜி நாட்டின் மிக உயரிய விருது பெற்ற குடியரசுத்தலைவருக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 06 AUG 2024 5:29PM by PIB Chennai

ஃபிஜியின் மிக உயரிய விருதான ‘கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஃபிஜி’a விருது குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

இதற்காக குடியரசுத்தலைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

 

"ஃபிஜியின் மிக உயரிய விருதான ‘கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஃபிஜி’ விருதினைப் பெற்றுள்ள குடியரசுத்தலைவருக்கு வாழ்த்துகள். இது ஒவ்வொரு இந்தியருக்கும் மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் தருணமாகும். குடியரசுத்தலைவரின் தலைமைத்துவத்திற்கும், இந்தியா, ஃபிஜி மக்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர்புக்குமான அங்கீகாரமாகும்."

 

***

SMB/RR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2042298) வருகையாளர் எண்ணிக்கை : 118