பிரதமர் அலுவலகம்

பிங்கலி வெங்கய்யா பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மரியாதை


இல்லந்தோறும் மூவர்ணக்கொடி இயக்கத்தை ஆதரிக்குமாறு குடிமக்களை வலியுறுத்தினார்

Posted On: 02 AUG 2024 2:02PM by PIB Chennai

பிங்கலி வெங்கய்யா பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டிற்கு மூவர்ணக் கொடியை வழங்குவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் நினைவு கூர்ந்தார். ஆகஸ்ட் 9 முதல் 15 வரை மூவர்ணக் கொடியை ஏற்றி, harghartiranga.com  இணைய தளத்தில் தங்கள் செல்ஃபிக்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், இல்லந்தோறும் மூவர்ணக்கொடி இயக்கத்திற்கு ஆதரவளிக்குமாறு  நாட்டு மக்களை திரு மோடி கேட்டுக்கொண்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"பிங்கலி வெங்கய்யா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். மூவண்ணக் கொடியை நமக்கு வழங்குவதில் அவர் மேற்கொண்ட முயற்சி எப்போதும் நினைவுகூரப்படும்.

ஆகஸ்ட் 9 முதல் 15 வரை இல்லந்தோறும் மூவர்ணக்கொடி இயக்கத்தை ஆதரித்து மூவர்ணக் கொடியை ஏற்றுங்கள்! உங்கள் செல்ஃபியை harghartiranga.com -இல் பகிர்ந்து கொள்ள மறவாதீர்"

***

MM/AG/KV



(Release ID: 2040824) Visitor Counter : 12