நிதி அமைச்சகம்

அரசின் சிறந்த நிதி, வர்த்தக கொள்கைகளால் நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் பணவீக்கம் 5.4 சதவீதமாகக் குறைந்துள்ளது

Posted On: 22 JUL 2024 3:05PM by PIB Chennai

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை 2023-24, விலை உயர்வு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு கவனத்தை எடுத்துரைக்கிறது. நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் அதே வேளையில் பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் நடவடிக்கையை அரசும் வங்கிகளும் மேற்கொண்டுள்ளன என்று அந்த அறிக்கை கூறுகிறது. கொவிட்-19 பெருந்தொற்று காலத்திலிருந்து கடந்த 4 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாக 2024-ம் நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக இருந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி, 2022, 2023-ம் ஆண்டுகளில் இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம், உலக சராசரியை விட குறைவாக உள்ளது என்ற தகவலை பொருளாதார ஆய்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைக் குறைப்பு போன்ற நிர்வாக நடவடிக்கைகள் பணவீக்கத்தைக் குறைக்க வழிவகுத்தது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

உணவுப் பணவீக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக அளவில் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தியாவில், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் போதுமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக திறந்த சந்தை விற்பனை, குறிப்பிட்ட விற்பனை நிலையங்களில் சில்லறை விற்பனை, சரியான நேரத்தில் இறக்குமதி உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளை அரசு எடுத்தது. இது தவிர ஏழைகளுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, 81 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு இலவச உணவு தானியங்களை வழங்கும் பிரதமரின் ஏழைகளுக்கான  உணவு தானிய திட்டம் 2024 ஜனவரி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவை இந்தியாவின் நுகர்வோர் விலை பணவீக்கம் 2026-ம் நிதியாண்டில் படிப்படியாக சீரடையும் என்று கணித்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034947

*****

(Release ID: 2034947)

PLM/KPG/KR



(Release ID: 2035658) Visitor Counter : 47