பிரதமர் அலுவலகம்

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள பேமா கண்டுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 13 JUN 2024 1:31PM by PIB Chennai

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள பேமா கண்டுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.  

பதவியேற்றுள்ள மற்ற அமைச்சர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், மேலும் கூடுதலான வேகத்தில் வளர்ச்சியை உறுதி செய்வதன் மூலம் மக்களுக்கு சேவை செய்யும் அவர்களின் எதிர்கால நல்வாய்ப்புக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றுள்ள பேமா கண்டு அவர்களுக்கு வாழ்த்துகள். அமைச்சர்களாக பதவியேற்றுள்ள அனைவருக்கும் நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். மக்கள் சேவையில் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் எனது நல்வாழ்த்துகள். மேலும் கூடுதல் வேகத்துடன் மாநில வளர்ச்சியை இந்த அணி உறுதி செய்யும்.”

-------------------

 (Release ID: 2024982) 

SMB/RS/RR



(Release ID: 2025000) Visitor Counter : 56