சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் வெப்ப அலை தயார்நிலை குறித்து மாநிலங்களுடன் மத்திய சுகாதார அமைச்சகம் ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது

Posted On: 06 JUN 2024 11:19AM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தீத்தடுப்பு மற்றும் மின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் தயார்நிலையை மதிப்பிடுவதற்காக மத்திய சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ சேவைகளில் தலைமை இயக்குநர் டாக்டர் அதுல் கோயல் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் மெய்நிகர் கூட்டத்தை நடத்தினார்.

மே 27-ந் தேதி, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட நீண்ட தூர கண்ணோட்ட முன்னறிவிப்பின்படி, ஜூன் மாதத்தில், தெற்கு தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாதாந்திர அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில், வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும், மத்திய இந்தியாவின் அருகிலுள்ள பகுதிகளிலும் இயல்பான வெப்ப அலை நாட்கள் அதிகமாக இருக்கும்.

மாநில சுகாதாரத் துறைகளுக்கு கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன:

  • சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள், வெப்பம் தொடர்பான நோய்களுக்கான தயார்நிலை பற்றி மாநில சுகாதாரத் துறைகளுக்கு ஆலோசனை
  • செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை மற்றும் பொது சுகாதார ஆலோசனை.
  • கடுமையான வெப்பம் தொடர்பான நோய்களுக்கான அவசரகால குளிரூட்டல் குறித்த வழிகாட்டுதல்கள்.
  • வெப்பம் தொடர்பான இறப்புகளில் பிரேத பரிசோதனை முடிவுகள் குறித்த வழிகாட்டுதல்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து எய்ம்ஸ் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கும் வழங்கப்பட்டன
  • சுகாதாரத்துறை, குடும்ப நல அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலாளரிடமிருந்து கூட்டு தகவல் மற்றும் சுகாதார மையங்களில் தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகத்திலிருந்து தகவல் பெறுதல்.
  • வெப்பத்தின் உடல்நல தாக்கங்களைத் தடுக்கவும் நிர்வகிக்கவும், சுகாதார வசதி மற்றும் ஆம்புலன்ஸ் தயார்நிலையை மதிப்பிடுவதற்கான சரிபார்ப்பு பட்டியல்

மார்ச் 23-ந் தேதி அனுப்பப்பட்ட கடிதத்தின் மூலம், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தீவிர வெப்பத்தால் ஏற்படும் பேரழிவு சம்பவங்களைத் தடுக்க செயலில் நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து மே 29 அன்று தீ பாதுகாப்பு தொடர்பாக அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மற்றொரு கடிதம் அனுப்பப்பட்டது.

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மேற்கொள்ள வேண்டிய கீழ்க்காணும் விரிவான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டன:

  • வெப்ப சுகாதார செயல் திட்டத்தை செயல்படுத்துதல்
  • இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட வெப்ப அலைகள் பற்றிய முன்கூட்டிய எச்சரிக்கையை பரப்புதல்
  • அனைத்து சுகாதார வசதிகளின் தயார்நிலை மதிப்பீடு மற்றும் எச்.ஆர்.ஐ தடுப்பு மற்றும் மேலாண்மைக்கான ஆம்புலன்ஸ் தயார்நிலை
  • ஐஎச்ஐபி-யில் வெப்பம் தொடர்பான நோய் மற்றும் இறப்பு கண்காணிப்பை வலுப்படுத்துதல்
  • அனைத்து சுகாதார நிலையங்களிலும் வெப்ப பாதிப்பு சிகிச்சைக்கான பிரத்யேக அறை
  • சுகாதார ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் தகவல், கல்வி மற்றும் தொடர்பு நடவடிக்கைகளை திட்டமிடுதல்
  • மனித வள சுட்டெண் அறிகுறிகள், நோய் கண்டறிதல், மருத்துவ மேலாண்மை, அவசர குளிர்வித்தல் மற்றும் கண்காணிப்பு அறிக்கை அளித்தல் குறித்து மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு உணர்திறன் மேம்பாடு.
  • தீவிர வெப்பத்தை தாங்கும் திறன்
  • மையப்படுத்தப்பட்ட வெகுஜன ஒன்றுகூடல் / விளையாட்டு நிகழ்வு தயார்நிலை
  • பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை அடையாளம் காண வழக்கமான தீ அபாய மதிப்பீட்டு ஒத்திகைகளை நடத்துதல்
  • எரியக்கூடிய பொருட்களின் சரியான சேமிப்பு மற்றும் மின் சுற்றுகள் மற்றும் அமைப்புகளின் வழக்கமான மற்றும் உகந்த தடுப்பு பராமரிப்பு போன்ற பொருத்தமான தீத் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துதல்.
  • தீ பாதுகாப்பு நெறிமுறைகள், வெளியேற்றும் நடைமுறைகள் மற்றும் தீயணைப்பு உபகரணங்களின் பயன்பாடு குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல்.
  • புகை அலாரங்கள், தீயணைப்பான்கள் மற்றும் தெளிப்பான்கள் உள்ளிட்ட தீ கண்டறிதல் மற்றும் அணைக்கும் அமைப்புகளை நிறுவுதல்.
  • தீ விபத்து ஏற்பட்டால் நோயாளிகள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களை வெளியேற்றுவதற்காக அவசரகால பதிலளிப்பு திட்டத்தை நிறுவுதல்.
  • மிக முக்கியமாக, சமரசம் இல்லாமல் அவசரகால பயிற்சிகளை தொடர்ந்து நடத்துவது.

 

மாநில அளவிலான தயார்நிலை:

அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் உயர்மட்ட அதிகாரிகள் நிலைமையை கடுமையாகக் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் தீ பாதுகாப்பு விபத்துகள் குறித்து மாதிரி ஒத்திகைகளை மேற்கொண்டுள்ளன. நகர்ப்புற நிர்வாகம் மற்றும் பொறியியல் துறைகள் ஒருங்கிணைந்து தீ பாதுகாப்பு தொடர்பான ஒத்திகைப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. ஒடிசாவில் மாநிலம் முழுவதும் வெப்ப அலை கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் நடத்தப்படுகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்களிலும் தீ பாதுகாப்பு அலுவலர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அனைத்து சுகாதார வசதிகளிலும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தளவாடங்களை உறுதி செய்வதற்காக ஹரியானா பிரத்யேக நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளது. ராஜஸ்தானில், 104 & 108 உடன் இணைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்களில் குளிரூட்டும் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில், தீயணைப்புத் துறைகளிடமிருந்து தீ பாதுகாப்பு சான்றிதழ்கள் உறுதி செய்யப்பட்டு, மாதிரி பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. பீகாரில், சுகாதார வசதிகளில் தீ விபத்துகளைத் தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் ஒருங்கிணைப்பு நடந்து வருகிறது. தில்லி அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் தீயணைப்பு அமைப்புக்கான உத்தரவுகளையும் வெளியிட்டுள்ளது. அரசு / தனியார் நிறுவனங்களில் தீ வெளியேற்ற திட்டங்கள் மற்றும் தீயணைப்பு அமைப்பு ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

***

(Release ID: 2023031)

PKV/AG/RR



(Release ID: 2023067) Visitor Counter : 53