பிரதமர் அலுவலகம்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற மனுவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 27 OCT 2023 6:49PM by PIB Chennai

ஹாங்சூ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் குண்டு எறிதல் – எஃப் 37 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனுவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மனுவின் வெல்லற்கரிய வலிமையைப் பாராட்டிய பிரதமர், அவரது திறமை தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளது என்றார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் குண்டு எறிதல் - எஃப் 37 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மனுவுக்கு வாழ்த்துகள்.

அவரது குறிப்பிடத்தக்க வலிமையும் திறமையும் நமது தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளன. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்."

***

 

SMB/AG/KPG



(Release ID: 2018436) Visitor Counter : 23