பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் உதய தினத்தை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 10 MAR 2024 5:16PM by PIB Chennai

மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதய தினத்தை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பணியாளர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;

"மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு பெருமையும், புகழும் மிக்க உதய தின வாழ்த்துக்கள்! நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதில் படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் விழிப்புணர்வு ஈடு இணையற்றது. அவர்களின் தொழில்முறைத் திறனும், செயல் திறனும் பாதுகாப்பு உலகில் ஒரு மிகச்சிறந்த சாதனை அளவைக் கொண்டுள்ளது. @CISFHQrs"

***

PKV/AG


(வெளியீட்டு அடையாள எண்: 2013646) வருகையாளர் எண்ணிக்கை : 120