பிரதமர் அலுவலகம்

பழங்குடியினரின் மிகப்பெரிய பண்டிகையான சம்மக்கா – சரக்கா மேதரம் ஜாதரா தொடங்கியுள்ளதையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 21 FEB 2024 10:30AM by PIB Chennai

பழங்குடியினரின் மிகப்பெரிய பண்டிகையான சம்மக்கா சரக்கா மேதரம் ஜாதரா தொடங்கியுள்ளதையொட்டி  பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சம்மக்கா-சரக்காவுக்கு மரியாதை செலுத்திய திரு மோடி, அவை வெளிப்படுத்தும் ஒற்றுமை, வீர உணர்வை நினைவு கூர்ந்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

"நமது கலாச்சார பாரம்பரியத்தின் நீடித்த உணர்வின் துடிப்பான வெளிப்பாடாகவும், மிகப்பெரிய பழங்குடியினரின் திருவிழாக்களில் ஒன்றான சம்மக்கா-சரக்கா மேதரம் ஜாதராவின் தொடக்கத்தை முன்னிட்டு எனது வாழ்த்துகள். இந்த ஜாதரா பக்தி, பாரம்பரியம், சமூக உணர்வு ஆகியவற்றின் சிறந்த கலவையாகும். சம்மக்கா-சரக்காவுக்கு நாம் தலைவணங்குகிறோம், அவர்கள் உருவகப்படுத்தும் ஒற்றுமை, வீரத்தின் உணர்வை நினைவு கூர்கிறோம்’’.

***

(Release ID: 2007563)

ANU/PKV/IR/AG/KRS



(Release ID: 2007583) Visitor Counter : 74