பிரதமர் அலுவலகம்

ஆயுதப்படை கொடி தினத்தை முன்னிட்டு நாட்டின் துணிச்சல் மிக்க வீரர்களின் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களுக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

Posted On: 07 DEC 2023 1:56PM by PIB Chennai

ஆயுதப் படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு, நாட்டின் துணிச்சல் மிக்க வீரர்களின் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"ஆயுதப்படை கொடி தினமான இன்று,  நமது துணிச்சல் மிக்க  வீரர்களின் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களை நாம் மதிக்கிறோம். நமது தேசத்தைப் பாதுகாப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு ஈடு இணையற்றது. ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு நீங்கள் அனைவரும் நன்கொடை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."

*******

 

ANU/SMB/PKV/KV



(Release ID: 1983500) Visitor Counter : 67