சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தேசிய மருந்தக ஆணைய உத்தேச மசோதா 2023 குறித்து பொதுமக்களிடம் மத்திய சுகாதார அமைச்சகம் கருத்து கேட்கிறது

Posted On: 20 NOV 2023 11:56AM by PIB Chennai

தேசிய மருந்தக ஆணையத்தை அமைப்பதற்கும், மருந்தகச் சட்டம், 1948-ஐ ரத்து செய்வதற்கும் தேசிய மருந்தக ஆணைய மசோதா, 2023- ஐ இறுதி செய்ய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உத்தேசித்துள்ளது. அதன்படி, தேசிய மருந்தக ஆணைய வரைவு தயாரிக்கப்பட்டு 10-11-2023 தேதியிட்ட பொது அறிவிப்பின் மூலம் 14-11-2023 அன்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வலைத்தளத்தில்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு உத்தேசச் சட்டத்தை மேம்படுத்தும் பொருட்டு பொது மக்கள் / தொடர்புடையவர்களின் கருத்துக்களைக் கோருகிறது. கருத்துகளை 14-12-2023 வரை @hrhcell-mohfw@nic.in       அல்லது @publiccommentsahs@gmail.com மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

***


ANU/SMB/IR/AG/KPG

 



(Release ID: 1978221) Visitor Counter : 79