பிரதமர் அலுவலகம்

ஆச்சார்யா ஜே.பி.கிருபளானியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

Posted On: 11 NOV 2023 10:16AM by PIB Chennai

ஆச்சார்யா ஜே.பி.கிருபளானியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் திரு.நரேந்திரமோடி கூறியிருப்பதாவது;

“ஆச்சார்யா ஜே.பி.கிருபளானியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். காலனித்துவத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தின் உண்மையான கலங்கரை விளக்கமாக அவர் பரவலாக மதிக்கப்படுகிறார். ஜனநாயகம் மற்றும் சமூக சமத்துவத்தை வலுப்படுத்த அவரது அயராத உழைப்பு, நமது தேசத்தின் கட்டமைப்பில் நிரந்தர முத்திரையைப் பதித்துள்ளது. அவரது வாழ்க்கை மற்றும் பணி எப்போதும் சுதந்திரம் மற்றும் நீதியின் மதிப்புகளை நிலைநிறுத்துவதாக இருந்தது.”

****  

PKV/BS/DL



(Release ID: 1976336) Visitor Counter : 76