பிரதமர் அலுவலகம்

இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் அதிகரித்து வருவதற்குப் பிரதமர் பாராட்டு

Posted On: 08 NOV 2023 1:34PM by PIB Chennai

இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் அதிகரித்து வருவதை பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

2022-ஆம் ஆண்டில் இந்தியாவில் வசிப்பவர்களின் காப்புரிமை விண்ணப்பங்கள் 31.6% அதிகரித்துள்ளது, இது 11 ஆண்டு வளர்ச்சியைக் காட்டுகிறது என்று பிரதமர் டபிள்யூ.ஐ.பி.ஓ இடுகையின் இணைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்களின் அதிகரிப்பு நமது இளைஞர்களின் வளர்ந்து வரும் புதுமையான ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது, மேலும் இது வரவிருக்கும் காலத்திற்கு மிகவும் சாதகமான அறிகுறியாகும்."

***

ANU/PKV/AG/KPG



(Release ID: 1975647) Visitor Counter : 95