பிரதமர் அலுவலகம்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளிள் 2022 மகளிர் இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாரா வில்வித்தை வீராங்கனைகள் ஷீத்தல் தேவி, சரிதா ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 25 OCT 2023 6:54PM by PIB Chennai

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாரா வில்வித்தை வீராங்கனைகள் ஷீத்தல் தேவி, சரிதா ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"மகளிர் இரட்டையர் காம்பவுண்ட் போட்டியில் அற்புதமான வெள்ளிப் பதக்கம் வென்ற நமது பாரா வில்வித்தை வீராங்கனைகள் ஷீத்தல் தேவி, சரிதா ஆகியோருக்கு வாழ்த்துகள். இந்த வெற்றியை இந்தியா கொண்டாடுகிறது.”

----

ANU/SMB/BR/KPG

 



(Release ID: 1971343) Visitor Counter : 75