பிரதமர் அலுவலகம்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் படகு கேஎல்3 போட்டியில் மணீஷ் கௌரவ் வெண்கலப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்

Posted On: 24 OCT 2023 1:05PM by PIB Chennai

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் பாரா படகு கேஎல்3 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மணீஷ் கெளரவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பாரா படகு ஆடவர் கேஎல்3 பிரிவில் அற்புதமான செயல்திறனுக்காகவும் வெண்கலப் பதக்கம் வென்றதற்காகவும்  மணீஷ் கௌரவுக்கு வாழ்த்துகள்.  இது ஒரு சிறந்த சாதனை, அவரது முழுமையான அர்ப்பணிப்பின் விளைவாகும்!"

***

ANU/AD/SMB/DL



(Release ID: 1970423) Visitor Counter : 83