பிரதமர் அலுவலகம்
பிரதமர் தமது செங்கோட்டை உரையில் வெளியிட்ட அறிவிப்புகள் தொடர்பாக முக்கிய ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2023 2:20PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தமது சுதந்திர தின செங்கோட்டை உரையில் வெளியிட்ட அறிவிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று (07.10.2023) ஒரு முக்கியமான கூட்டத்தை நடத்தினார்.
பிரதமர் தமது சுதந்திர தின உரையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் வீட்டுவசதி கிடைப்பதை உறுதி செய்வது குறித்து குறிப்பிட்டிருந்தார். அதன்படி, இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார்.
பிரதமர் தமது சுதந்திர தின உரையில், வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை உறுதி செய்வது குறித்தும் குறிப்பிட்டிருந்தார். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளையும் பிரதமர் ஆய்வு செய்தார்.
***
ANU/PKV/PLM/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1965395)
வருகையாளர் எண்ணிக்கை : 157
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam