பிரதமர் அலுவலகம்

மற்றொரு மைல்கல்லை எட்டிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 31 AUG 2023 9:45PM by PIB Chennai

மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் உள்ள 700 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய உள்நாட்டு அணுஉலை மின் நிலையமான, காக்ரபார் அணுமின் நிலையத்தின் 3-வது அலகு முழு திறனுடன் செயல்பாட்டை தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“இந்தியா மைல்கல்லை எட்டியுள்ளது.”

“முதலாவது மிகப்பெரிய உள்நாட்டு அணுஉலை மின் நிலையமான, குஜராத்தில் உள்ள காக்ரபார் அணுமின் நிலையத்தின் 3-வது அலகு முழு திறனுடன் செயல்பாட்டை தொடங்கியுள்ளது.

நமது விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்.”

***

 

AD/PLM/AG/KPG

 



(Release ID: 1954175) Visitor Counter : 127