பிரதமர் அலுவலகம்

ஏதென்ஸில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடல்

Posted On: 25 AUG 2023 10:37PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி 25.082023 அன்று ஏதென்ஸில் உள்ள ஏதென்ஸ் கன்சர்வேட்டரியில் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார்.

பிரதமர் தமது உரையில், இந்தியா தற்போது அடைந்து வரும் முன்னெப்போதும் இல்லாத மாற்றங்களையும், பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் எடுத்துரைத்தார். சந்திரயான் திட்டத்தின் வெற்றியை அவர் பாராட்டினார்.

இந்தியா-கிரீஸ் இடையிலான பன்முக உறவுகளை மேம்படுத்துவதில் கிரேக்கத்தில் உள்ள இந்திய சமூகத்தினரின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர், இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு பகுதியாக இருக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

******

ANU/AP/PLM/DL



(Release ID: 1952411) Visitor Counter : 105