பிரதமர் அலுவலகம்

தெலுங்கு, சமஸ்கிருத அறிஞர் திரு கண்டலகுண்டா அலஹா சிங்காரச்சார்யுலு மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 14 AUG 2023 9:36PM by PIB Chennai

தெலுங்கு, சமஸ்கிருத அறிஞர் திரு கண்டலகுண்டா அலஹா சிங்காரச்சார்யுலு மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"திரு  கண்டலகுண்டா அலஹா சிங்காரச்சார்யுலுவின் மறைவு வருத்தமளிக்கிறது. சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மீதான அவரது ஆர்வம், அவரது படைப்புகளில் பிரதிபலித்தது. அவரது அறிவு மற்றும் ஞானத்திற்காக அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி: பிரதமர் @narendramodi"

----

ANU/AP/BR/DL



(Release ID: 1948828) Visitor Counter : 105