பிரதமர் அலுவலகம்
உலக யானைகள் தினத்தில் யானைகளைப் பாதுகாக்க உறுதி: பிரதமர் வலியுறுத்தல்
Posted On:
12 AUG 2023 9:44PM by PIB Chennai
உலக யானைகள் தினத்தன்று யானைகளைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தினார்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியதாவது:
“உலக யானைகள் தினத்தில், இந்தியாவின் வளமான இயற்கை பாரம்பரியத்துடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடைய யானைகளைப் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவரையும் நான் பாராட்டுகிறேன். முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சமீபத்தில் நான் சென்ற சில காட்சிகளைப் பகிர்ந்துக் கொள்கிறேன்.”
**************
ANU/AP/RB/DL
(Release ID: 1948269)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam