பிரதமர் அலுவலகம்

இந்தியாவின் விண்வெளி சாகசத்தில் புதிய அத்தியாயத்தை சந்திரயான்-3 படைத்துள்ளது: பிரதமர்

Posted On: 14 JUL 2023 3:22PM by PIB Chennai

சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இந்திய விஞ்ஞானிகளின் இடையறாத அர்ப்பணிப்பைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இஸ்ரோவின் ட்விட்டர் பதிவை  பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் விண்வெளி சாகசத்தில் புதிய அத்தியாயத்தை சந்திரயான்-3 படைத்துள்ளது அது உயரப் பறந்து ஒவ்வொரு இந்தியரின் லட்சியங்களையும், கனவுகளையும் உயர்த்தியுள்ளது.  இந்த மகத்தான சாதனை நமது விஞ்ஞானிகளின் இடையறாத அர்ப்பணிப்புக்கு சான்றாகும். அவர்களது உணர்வுக்கும்,  மதிநுட்பத்துக்கும் நான் தலைவணங்குகிறேன்”.

***

LK/PKV/RS/AG

 


(Release ID: 1939486) Visitor Counter : 215