பிரதமர் அலுவலகம்
அரசு இ-சந்தையில் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களுக்குப் பிரதமர் பாராட்டு
Posted On:
28 JUN 2023 9:40AM by PIB Chennai
ஜெம் எனப்படும் அரசு இ-சந்தையில் அதிக கொள்முதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்..
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல், தமது ட்விட்டர் பதிவில், க்ரேடா-விக்ரேடா கௌரவ் சம்மான் சமரோவா 2023 விழாவில், அரசு இ-சந்தையில் சிறப்பாக செயல்பட்டவர்களின் சேவைகளை அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அவர்களுக்கு வெகுமதிகள் அளிக்கப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார். இந்த விழாவுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் சார்பில் ஜெம் எனப்படும் அரசு
இ-சந்தை ஏற்பாடு செய்திருந்தது.
திரு.பியூஷ் கோயலின் ட்விட்டுக்கு பதிலளித்த பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“அரசு இ-சந்தையில் சிறப்பாக செயல்பட்டவர்களின் பங்களிப்புக்கு பாராட்டுக்கள். இந்தியாவின் வளம் மற்றும் தற்சார்பு பயணத்திற்கு இத்தகைய முயற்சிகள் வலிமையூட்டும்”.
***
(Release ID: 1935784)
AP/GS/RR
(Release ID: 1935834)
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam