பிரதமர் அலுவலகம்

பிரதமருக்கு எகிப்தின் உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் தி நைல்" விருது வழங்கப்பட்டுள்ளது

Posted On: 25 JUN 2023 7:09PM by PIB Chennai

கெய்ரோவில் உள்ள எகப்து அதிபர் மாளிகையில் (பிரசிடென்சி) இன்று (25-06-2023) நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், எகிப்து அதிபர்  திரு அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு எகிப்தின் உயரிய சிவிலியன் விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருதை வழங்கினார்.

 

எகிப்து அதிபர் சிசி வழங்கிய இந்த கௌரவத்திற்கு இந்திய மக்கள் சார்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

 

இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் பிரதமர் திரு நரேந்திர மோடியே ஆவார்.

***

AD/PLM/DL



(Release ID: 1935245) Visitor Counter : 162