பிரதமர் அலுவலகம்

மகாராஷ்டிர மாநிலம் ராய்கடில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது

Posted On: 15 APR 2023 1:49PM by PIB Chennai

மகாராஷ்டிர மாநிலம் ராய்கடில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களுக்குப்  பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்குப்  பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (பிஎம்என்ஆர்எஃப்) கருணைத் தொகை வழங்கப்படும் என திரு மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் தொடர்ச்சியான  ட்விட்டர் பதிவுகளில், பிரதமர் கூறியிருப்பதாவது;

"மகாராஷ்டிர மாநிலம் ராய்கடில் ஏற்பட்ட பேருந்து விபத்து வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்கள், விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள்  என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது: பிரதமர்"

"ராய்கட் பேருந்து விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும்  பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்: பிரதமர்"

***

AD/SMB/DL



(Release ID: 1916887) Visitor Counter : 108