பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வனவிலங்குகள் குறித்த மக்களின் ட்விட்டர்களுக்கு பிரதமர் பதில்

Posted On: 10 APR 2023 9:33AM by PIB Chennai

வனவிலங்குகள் மீதான மக்களின் ஆர்வம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி குடிமக்களுடன் கலந்துரையாடினார்.

பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்கு நேற்று பயணம் மேற்கொண்ட போது, ​​பிரதமருக்கு யானைகள் ஆசி வழங்குவது குறித்த பரசுராம் எம்ஜியின் கருத்துக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டிருந்த, ட்விட்டர் பதிவு வருமாறு:

"ஆமாம் அது உண்மையில் சிறப்புதான்."

தில்லி தேசிய விலங்கியல் பூங்காவிற்கு பிரியங்கா கோயலின் வருகையைப் பாராட்டிய திரு மோடி, அதற்குப் பதிலளித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

"சிறப்பு. இந்தியாவின் மலர் மற்றும் விலங்கினங்களின் பன்முகத்தன்மை அற்புதமானது, மேலும் இதைப் பற்றி கண்டறிய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்."

நேற்றைய புகைப்படங்களையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

***

AD/PKV/AG/RR



(Release ID: 1915414) Visitor Counter : 129