பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிபிநகரில் உள்ள எய்ம்ஸ்-ல் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் தெலங்கானா மாநிலம் பயன்பெறும்: பிரதமர்

Posted On: 06 APR 2023 4:49PM by PIB Chennai

பிபிநகரில் உள்ள எய்ம்ஸ்-ல் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் தெலங்கானா மாநிலம் பயன்பெறும் என்றும் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு மேலும் வலுவூட்டும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பதிவில், “ஏப்ரல் 8, 2023 அன்று பிபிநகரில் உள்ள எய்ம்ஸ்-ல் புதிய அதிநவீன வசதிகளை ஏற்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்என்றார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் ட்விட்டுக்கு பதிலளித்துள்ள பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

பிபிநகரில் உள்ள எய்ம்ஸ்-ல் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் தெலங்கானா மாநிலம் பயன்பெறும் என்றும் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு மேலும் வலுவூட்டும்.”

***

AP/GS/RJ/KPG


(Release ID: 1914374) Visitor Counter : 156